Posts

Featured Post

169 தொகுதிகளில் அதிமுக போட்டி.. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் - முழு விவரம்

Image
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் யாருக்கு எந்த தொகுதி என்பதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. சென்னையில் இன்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அப்போது நைனார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் உடனிருந்தனர். கட்சிகள் போட்டியிடும் விவரம்:   பாஜக (27 தொகுதிகள்) மயிலாப்பூர் தளி முடக்குறிச்சி உதகமண்டலம் அவிநாசி திருப்பூர் தெற்கு கோவை வடக்கு கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை திருப்பத்தூர் மதுரை தெற்கு சாத்தூர் திருச்செந்தூர் வாசுதேவநல்லூர் ராதாபுரம் நாகர்கோவில் விளவங்கோடு ஆவடி திருவண்ணாமலை தஞ்சாவூர் திருவாரூர் அறந்தாங்கி மானாமதுரை ராமநாதபுரம் குளச்சல் பத்மநாபபுரம் ராசிபுரம் (தனி) பாமக (18 தொகுதிகள்) சேலம் மேற்கு தர்மபுரி பென்னாகரம...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு- ஏப்ரல் 9ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும்!

Image
  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேருக்கும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பு

"அதிமுக ஆட்சியில் முடங்கி கிடந்த தமிழகத்தை நம்பா் ஓன் மாநிலமாக மாற்றியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் " - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

Image
  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1ம்கேட் காந்தி சிலைப்பகுதியில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாநகர் திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி காங்கிரஸ் முரளிதரன் கம்யூனிஸ்ட் தனலட்சுமி முத்து விசிக விமல் வங்காளியாா் மதிமுக முருகபூபதி இ.யூ.மு.லீ மும்தாஜ், சமக அற்புதராஜ், மநீம் ஜவஹா் தேமுதிக வல்லரசு துரை தஅக மங்களராஜ் பாண்டியன், மமக யூசப், தமுமுக சேக்முகைதீன்அலி, எஸ்டிபிஐ மைதீன்கணி, வட்டச்செயலாளர் சாமிநாதன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா் வரவேற்புரையாற்றினாா்.  வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:-   2021ல் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற காலம் கொரானா காலக்கட்டம் அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் வீட்டுக்குள் முடங்கி இருங்கள் என்று கூறி அனைத்து தொழில் வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு முடக்கி போட்டிருந்தாா்கள். அதையெல்லாம் மீட்டெடுக்கும் வகையில் ஆக்ஜிஸன் தட்டுபாடு அதை ரயில்கள் மூலம் வரவைத்து அங்கிருந்து ஓவ்வொ...

"தமிழகத்தில் தற்போது நடைபெற இருப்பதும் ஓரு போா் தான் அதில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்" - நல்லகண்ணு படத்திறப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை

Image
தூத்துக்குடி மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு படத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை செயற்குழு உறுப்பினர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஐஎன்டியுசி ராஜு, சிஐடியு ரசல், ஏஐடியுசி லோகநாதன், தொமுச சுசி ரவீந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஏபிசிவி. சண்முகம் ஏற்ப்புரை வழங்கினார்.  மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு படத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் திறந்து வைத்து பேசுகையில் நல்லகண்ணு ஐயா படத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன். அவா் மறைந்த போது நான் சென்னைக்கு சென்று அவருக்கு நோில் அஞ்சலி செலுத்தினேன். ஏனென்றால் நமது மாவட்டத்தை சார்ந்தவர் என்பது மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், எதிர்கால இந்தியாவை உருவாக்கக்கூடிய இளைஞர்களும் பின்பற்ற வேண்டிய ஒரு தலைவர்.  அவருடைய சமூக செயல்பாடு, இந்திய விடுதலை போராட்ட களங்கள், பல்லாண்டு சிறைக் கொடுமை, சித்திரவதைகள் என தனது இளமைக் காலம் முழுவதும் நாட்டுக்க...

தூத்துக்குடி : பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக சர்வ சாதாரணமாக நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள்- காவல்துறை நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை.!

Image
  தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பேருந்து நிற்க்கக்கூடிய கவுண்டர்களில் தனியார் கார்கள் மற்றும் பைக்குகள் சர்வ சாதாரணமாக நிறுத்தப்படுவதால் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும்  இடையூறாக உள்ளது என பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தூத்துக்குடியின் மிக முக்கிய பேருந்து  நிலையமாக நகரின் மையப் பகுதியில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து கன்னியாகுமரி, நாகர் கோவில், தென்காசி, உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அரசு பஸ்கள், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள்.  இந்தநிலையில் பேருந்து  நிலையத்துக்குள் பைக், கார், ஆட்டோக்கள் கட்டுப்பாடின்றி வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்துக்குள் உள்ள கடைகளின் முன்புறமும் பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பேருந்துகளை குறிப்பிட்ட கவுண்டர்களில் நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் வாலிபர்கள் சிலர் பைக...

தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கையால் அதிரும் தூத்துக்குடி - பெண் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு.!

Image
தேர்தல் நாள் மே.23, தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. இதன்பிறகு தேர்தல் பறக்கும் படையின் பணிகளும் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் அரசியல் தலைவர்கள் படம், கொடி, சின்னம் போன்ற அரசியல் சார்ந்து வாகனங்களில் ஒட்டி இருப்பதை அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. நடவடிக்கையின் படி, அமைச்சர் கீதா ஜீவன் படம் ஒட்டி வந்த ஆட்டோவை வழிமறித்து கிழிக்கும் படி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  ஆட்டோ ஓட்டுநருக்கு உத்தரவிட்டு, கீதா ஜீவன் படமும் அகற்றப்பட்டது. இது தூத்துக்குடியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த வேளையில்,  தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிக் காரில் கட்சிக் கொடிகளைக் கட்டியிருந்ததோடு, கட்சித் துண்டையும் அணிந்து வந்த பாஜக பிரமுகர்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கையால்  அதிகாரிகளுடன் ஏற்பட்ட  கடுமையான வாக்குவாதத்தால்  தூத்துக்குடி தொகுதிக்குள் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக பாஜக பிரமுகர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடந...

லாரி மீது ஆட்டோ மோதி விபத்து - ஒருவர் பலி,10 பேர் படுகாயம்

Image
  தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே, முத்துநகர் கடற்கரைக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த 11 பேர் பயணித்த ஆட்டோ, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சோழபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ண லீலா (38) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பவதாரணி (11), பாக்கியலட்சுமி (17), ராஜா வர்ஷினி (14), மகாலட்சுமி (19), சுபாஷிணி (21), மகாலட்சுமி (47), சீதாலட்சுமி (19), ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் (32), கார்த்திக் (20), ஸ்டீபன் ராஜ் (19) ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துறைமுகத்திலிருந்து மரத்தடிகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை கவனிக்காமல் ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக திரும்பிய குடும்பத்தில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படு...