Posts

Featured Post

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் வாக்காளர்கள் நீக்கம்.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 1,62,527 பேர் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் - ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார். அதன்படி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 197947 வாக்காளர்கள், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்  236461 வாக்காளர்கள், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 222631 வாக்காளர்கள், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 207054 வாக்காளர்கள், ஓட்டப்பிடாரம்(தனி) சட்டமன்ற தொகுதியில் 232536 வாக்காளர்கள், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 231529 வாக்காளர்கள்  என மொத்தம் 1,32,81,558 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 649224 ஆண்கள், 678752 பெண்கள், 182 இதரர் என மொத்தம் 1,32,81,558 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 162527 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம். இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சே...

தூத்துக்குடி : கிறிஸ்துமஸ் கேரல் அலங்கார வாகன ஊர்வலத்திற்கான விதிமுறைகள் - மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

Image
தூத்துக்குடி நகர பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையினை முன்னிட்டு 24-12-2025 அன்று மாலை நடைபெறவிருக்கும் கேரல் ஊர்வலம் தொடர்பாக, பண்டிகையினை கொண்டாடும் மக்கள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டியும், கேரல் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள், பொதுமக்கள் மற்றும் பொது அமைதிக்கு எவ்வித பிரச்சனைகளும் எற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும் காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்தான நடவடிக்கையில் ஒவ்வொரு கேரல் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தலைமையில் 26-11-2025 அன்றும், தூத்துக்குடி நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சி. மதன், தலைமையில் 12-12-2025 மற்றும் 15-12-2025 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை எடுத்துரைத்தும்,  முக்கியமாக உயரமான கேரல் அமைப்புகள் சாலையில் உள்ள உயர் மின் அழுத்த வயர்களில் உரசி மிகப்பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி, கேரல் வாகனத்தின் உயரம் மின்வாரியத்தால் பரிந்த...

சிப்காட் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு.!

Image
  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று (18.12.2025) சிப்காட் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை (Kit Inspection) பார்வையிட்டும், அங்கு  பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். மேலும் மேற்படி காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள்  மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை ( Reception Slip) வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

Image
  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று (18.12.2025)  தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஆய்வு மேற்கொண்டு அங்கு  பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குருவெங்கட்ராஜ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டிடம் மொட்டை மாடியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் ப்ரியங்கா திடீர் ஆய்வு.!

Image
  தூத்துக்குடி பழைய மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாம் முடிவடைந்த பின்பு திடீரென்று அங்கிருந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் இரண்டு மாடி ஏறி மொட்டை மாடிக்கு சென்றனர்.  மேயரும் ஆணையரும் மழையின் போது குடை பிடித்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றதையடுத்து அதிகாரிகளும் பணியாளர்களும் உடனடியாக பின் தொடர்ந்து ஓடினார்கள். மொட்டை மாடிக்கு ஏறியவுடன் அதனை பார்வையிட்ட மேயர் ஜெகன் பொியசாமி மொட்டை மாடி ஒரு பகுதியில் சிறிய அளவில் ஒரு மரம் வளர்ந்துள்ளது உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இதனை ஏன் அப்புறப்படுத்தாமல் வைத்திருந்தீர்கள் என்று அங்கு இருந்த அதிகாரிகள் பணியாளர்களிடம் கூறினாா்.  அதுபோல மொட்டை மாடியில் பழைய பைப்புகள் போடப்பட்டுள்ளது இந்த பைப்புகள் எல்லாம் இங்கு ஏன் வந்தது உடனடியாக இதனை இங்கிருந்து அப்புறப்படுத்தி மாநகராட்சி குடோனில் கொண்டு வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மேலும் மொட்டை மாடியில் சில இடங்களில் மழைநீர் தேங்கி கீழே தண்ணீர் இறங்குவதை கண்டறிந்து உடனடியாக அதனை சரி செய்ய வேண...

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி.!

Image
  தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமாக எம்.ஜி.ஆர் மாளிகையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  அதன்படி கடந்த 15ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மட்டுமின்றி எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும் என்று பலர் விருப்ப மனுக்கள் வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 23ம் தேதிக்குள் தெற்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் சென்னை எம்ஜிஆர் மாளிகையில் விருப்பமனு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.  அதன் அடிப்படையில் தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் மேயர் அந...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

Image
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 689.86 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மழை அளவானது இயல்பான மழையளவை விட 27.66 மி.மீ கூடுதல் மழை அளவு ஆகும். பாபநாசம் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 839.757கன அடியாக உள்ளது. நீர்தேக்கத்திலிருந்து வெளியேறும் அளவு 800 கன அடியாக உள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்கமையங்களில் நெல் 8.53 மெ.டன், உளுந்து 101.88 மெ.டன், கம்பு 16.65 மெ.டன், சூரியகாந்தி 7.68 மெ.டன், பாசிப்பயறு 5.058 மெ.டன், சோளம் 3.72 மெ.டன், பருத்தி 1 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 2185 மெ.டன் யூரியா,2775 மெ.டன் காம்ப்ளக்ஸ், 2077 மெ.டன் டி.ஏ.பிஇ 738 மெ.டன் பொட்டாஷ் மற்றும் எஸ்.எஸ்.பி. 481 மெ.டன் உரங்கள் இருப்பில் உள்ளன. நடப்பு டிசம்பர் 2025 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு...