Posts

Featured Post

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோக்களில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தூத்துக்குடி மக்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு சங்கம்  செயலாளர் கே.கணேசன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எரிபொருள் விலை கூடுதலைத் தொடர்ந்து ஆட்டோ கட்டணங்கள் முறைப்படுத்தாத நிலையில், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் கூடுதல் கட்டணம் அதிகமாக நிர்ணயித்து, பொதுமக்கள், பயணிகளிடம் வசூல் செய்கிறார்கள். உதாரணமாக, சென்னை, மைசூரு இரயில் வரும் நேரங்களில் மேலூர் இரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல, ஒரு நபருக்கு ₹50/- வீதம், ஷேர் ஆட்டோ (Share Auto) போல வசூல் செய்கிறார்கள். அதேபோன்று தைப்பூசம் போன்ற விழா காலங்களில் திருச்செந்தூர் கோவிலிலிருந்து பேருந்து நிலையம் செல்ல ஒரு நடைக்கு ₹200/- வீதம் வசூலிக்கிறார்கள். இதே நடைமுறைதான் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நிலவுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டுகிறோ...

வ.உ.சி துறைமுகத்தில் பணியாற்ற சிறந்த வாய்ப்பு... ரூ.50000 வரை சம்பளம்... விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

Image
  வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தகுதிகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 1. பணியின் பெயர்: Associate Consultant i) பிரிவு: Civil காலியிடம்: 1 கல்வித்தகுதி: Civil Engineering-ல் B.E. / B.Tech. தேர்ச்சி மற்றும் Structural Engineering-ல் M.E. / M.Tech. தேர்ச்சி. இரண்டு வருட பணி அனுபவம் அவசியம். ii) பிரிவு: HR காலியிடம்: 1 கல்வித்தகுதி: Personnel Management / Human Resource / Industrial Relations / Labour Relations பிரிவில் முதுநிலைப்பட்டம் மற்றும் இரண்டு வருட பணி அனுபவம். சம்பளம்: ரூ.50,000 வயது: 40-க்குள் இருக்க வேண்டும். 2. பணியின் பெயர்: Professional Intern i) பிரிவு: Civil காலியிடம்: 1 கல்வித்தகுதி: Civil Engineering-ல் B.E. / B.Tech. தேர்ச்சி. ii) பிரிவு: Horticulture காலியிடம்: 1 கல்வித்தகுதி: Agriculture / Horticulture பிரிவில் டிப்ளமோ / இளநிலை பட்டம் மற்றும் 3 வருட பணி அனுபவம். iii) பிரிவு: Marine காலியிடங்கள்: 4 கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் மற்று...

"மீனவர்களுக்கு தனி தொகுதி வேண்டும், தூத்துக்குடி தொகுதியை இரண்டாக பிரியுங்கள்" - திடீர் கோரிக்கையுடன் களமிறங்கிய மீனவர் சமுதயாயம்.!- கேள்விக்குறியாகும் திமுகவின் வெற்றி.!?

Image
தூத்துக்குடி மாநகரை கிழக்கு மற்றும் மேற்கு எனப் பிரித்து, கிழக்கு தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று பரத குல உயர்மட்ட  ஒருங்கிணைப்பு குழு தலைவர் சேசையா வில்லவராயர் கூறியுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற பரதகுல உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து சமூகத்தின் தலைவர் சேசையா வில்லவராயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஹெர்மன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பரதகுல மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். மீனவர் வாக்குகள் அதிகமாக உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், ராதாபுரம், குளச்சல் தொகுதிகளில் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தூத்துக்குடி மாநகரை கிழக்கு மற்றும் மேற்கு எனப் பிரித்து, மீனவர்கள் அதிகம் வசிக்கும் தூத்துக்குடி கிழக்கு தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் மீனவர்களுக்கு எனத்...

தேசிய அளவில் நடைப்பெற்ற மாற்றுத்திறனிகளுக்கான போஸியோ விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற குடியாத்தம் வீராங்கனைக்கு பாராட்டு.!

Image
  வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மகாலட்சுமி இவர் தேசிய அளவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற போஸியோ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.  இவருக்கு சென்னை மாற்று திரனாளிகள் மறுவாழ்வு சமூக அமைப்பு ஏக்தா மற்றும் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் மாற்றுதிரனாளிகள் சங்கம் இணைந்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் நிகழ்ச்சியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் மாவட்ட தலைவர்  கே பொன்னம்பலம் லயன்ஸ் வட்டார தலைவர் ஜே.பாபு  மாற்றுத்திறனாளிகளின் நிர்வாகி அனுமந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை மகாலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்

தூத்துக்குடியில் அண்ணா நினைவு தினம் : அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை!

Image
  தூத்துக்குடியில் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.  தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் ராஜாஜி பூங்கா முன்பிருந்து துவங்கி பிரதான சாலை வழியாக வந்து காமராஜ் மார்க்கெட் எதிரில் உள்ள அண்ணா சிலையை அடைந்தது. அங்கு அண்ணாவின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், கலை இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண் குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், நிர்மல் ராஜ், பாலகுருசாமி, அன்னலட்சுமி, ம...

தூத்துக்குடியில் 1056 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி: அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.!

Image
  தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் 1056 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்.  தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 1056 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவும்  ஒதுக்கவில்லை. தமிழில் திருக்குறள் கூட படிக்கவில்லை. மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என்று எதிர்பார்த்து இருந்தோம் ஆனால் எதற்குமே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை.  தமிழகத்திற்கு மாற்றான் தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். திமுக அரசை தொடர்ந்து விஜய் விமர்சனம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் புரியாமல் பேசுகிறார் என்றார். விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், உட்பட பலர் கலந்து கொண்டனர். 

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஜனவரி மாதத்தில் சரக்குகளை சிறந்த முறையில் கையாண்டு சாதனை- சரக்கு கையாளுதலில் வலுவான வளர்ச்சி.!

Image
இது குறித்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.. இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள துறைமுகங்களில் மிகச்சிறந்த துறைமுகமான வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சரக்கு கையாளலில் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை தொடர்ந்து வெளிப்படுத்தி, கடல் வர்த்தகத்தில் உள்ள தன் முக்கிய நிலையை உறுதிப்படுத்துகிறது. துறைமுகம் தற்போதைய 2025-26 நிதியாண்டின் ஜனவரி மாதம் வரை, மொத்தம் 35.97 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் அதே காலக்கட்டத்தில் கையாளப்பட்ட 33.94 மில்லியன் டன் சரக்குகளுடன் ஒப்பிடும்போது 6 % வளர்ச்சியைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் கையாண்டதை விட 2.00 மில்லியன் டன் அதிக சரக்குகளைக் கையாண்டு முன்னிலையை பிரதிபலிப்பதுடன் துறைமுகம் தொடர்ந்து வளர்ச்சி மற்றும் வலுவான சரக்கு செயல்திறனை உறுதிப்படுத்துகிறது. இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து துறைமுகம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 4.00 மில்லியன் டன் சரக்குகளை ஒரே மாதத்தில் கையாண்டு வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 2024 மார்ச் மாதத்தில் கையாளப்பட்ட முந்தைய அதிகபட்சமான 3.95 மில்லிய...