Posts

Featured Post

தூத்துக்குடிக்கு கூடுதல் விமான சேவைகளுக்கு வாய்ப்பு : தூத்துக்குடிக்கு ஏர்பஸ் வகை விமானங்களை இயக்கவும், மும்பை, டெல்லிக்கு நேரடி விமானங்களை இயக்கவும் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு கனிமொழி MP கோரிக்கை..!

Image
  தூத்துக்குடிக்கு ஏர்பஸ் வகை விமானங்களை இயக்கவும், மும்பை, டெல்லி, கோயம்புத்தூர், ஹைதராபாத்திற்கு நேரடி விமானசேவைகள் வழங்கவும் தூத்துக்குடி MP கனிமொழி இண்டிகோ விமானநிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இண்டிகோ விமான நிறுவனத்திற்க்கு எழுதியுள்ள கடிதத்தில் :- "தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமான நிறுவனம் தனது சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தற்போது, ​​சிறிய விமானங்கள் இயக்கப்படுகின்றன, அவை அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. இரவு நேர தரையிறங்கும் வசதி கிடைத்தவுடன், இரவு நேர விமான நடவடிக்கைகளைத் தொடங்கவும், தற்போது பயன்பாட்டில் உள்ள சிறிய விமானங்களுக்குப் பதிலாக ஏர்பஸ் A320/321 போன்ற பெரிய திறன் கொண்ட விமானங்களை அறிமுகப்படுத்தவும் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். தூத்துக்குடியிலிருந்து மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகரங்கள் மற்றும் கோயம்புத்தூர், ஹைதராபாத் போன்ற தென்னிந்தியாவின் பிற வணிக மையங்கள் உட்பட பல இடங்களுக்கு நேரடி இணைப்பை விரிவுபடுத்தவும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நடவடிக்கைகள் பயணிகளுக்கு...

மழை பெய்தால் நீர் தேங்கி கழிவுநீருடன் கலந்து நோய் பரவும் அபாயம் - தூத்துக்குடி மாநகராட்சி விஎம்எஸ் நகர் பகுதியில் சாலை அமைக்க பொது மக்கள் கோரிக்கை .

Image
  தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு தெற்கு விஎம்எஸ் நகர் மேற்கு பகுதி தெருக்களில் உள்ள மணல் சாலைகளில் ஒவ்வொரு ஆண்டு மழை பெய்யும் பொழுது மழைநீர் கழிவுநீருடன் கலந்து பல மாதங்கள் தேங்கி நோய்களை பரப்பி வருகிறது.  இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முத்துநகர் கடற்கரையில், உலக தரம் வாய்ந்த நீச்சல்குளம் மற்றும் நீர் சார்ந்த விளையாட்டு பயிற்சிகள் 365 நாட்களும் நடைபெறும் - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

Image
  தூத்துக்குடி மாநகராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா, துணை மேயர் செ.ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினார்;. முகாமில் கிழக்கு  மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள். முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:-  "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது பதிவுகளை பதிவு செய்து வர...

காவலருடன் கள்ள உறவு.. அதீத மோகத்தால் பறிபோன உயிர் - தலைமறைவாக உள்ள இரண்டு சிறார்கள்..!

Image
  தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள திரேஸ் நகரை சேர்ந்தவர் தான் ராமசுப்பு. இவர் கர்நாடகாவில் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராம சுப்புவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சக்தி மகேஸ்வரி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராமசுப்பு பெங்களுருவில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் சக்தி பரமேஸ்வரிக்கும் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் ராஜேந்திரன் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த  நட்பு நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். காவலர் ராஜேந்திரனுக்கும் சக்தி மகேஸ்வரிக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு ராஜேந்திரனின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ராஜேந்திரன் மனைவி மற்றும் அவர் குடும்பத்தினர் சக்தி மகேஸ்வரி உடன் உள்ள தொடர்பை துண்டிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். மேலும் சக்தி மகேஸ்வரியிடம் காவலர் ராஜேந்திரனனின் குடும்பத்தினர் ராஜேந்திரன் உடனான உறவை கைவிட கூறியுள்ளனர் ஆனால் சக்தி ம...

"போதைப் பொருள் பயன்படுத்த மாட்டேன் என்று மாணவர்கள் மனதிலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்" அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு.!

Image
போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். போதைப் பொருள் பயன்படுத்த மாட்டேன் என்று மாணவர்கள் மனதிலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறினார்.  தூத்துக்குடி மாவட்டம் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் இன்று (18.09.2025) இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ப்ராஜெக்ட் / பியூச்சர் இந்தியா டிரஸ்ட் இணைந்து நடத்திய நாஷா முக்த் பாரத் அபியான் ‘போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போதையில்லா தூத்துக்குடி மாவட்டம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் குத்திவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது : தமிழ்நாடு அரசின், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் தொண்டு நி...

தூத்துக்குடி : துறைமுகத்தில் இறந்த 3 பேருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!

Image
தூத்துக்குடி : துறைமுகத்தில் பணி செய்யும் போது இறந்த 3 தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நேற்று மிதவை கப்பலில் டேங்க் சுத்தம் செய்ய சென்ற ஜார்ஜ் ஷரோன், சந்தீப்குமார் மற்றும் ஜெனிஸ்டன் ஆகிய 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் மிதவை கப்பலின் அடிப்பாகத்தில் உள்ள டேங்க், கப்பலின் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாகமாகும். துறைமுகத்தில் மிதவை கப்பல்கள் நிற்கும்போது, அதன் அடிப்பாகத்தில் உள்ள டேங்கை சுத்தம் செய்து, சீர்படுத்தி கொள்ளும் பணி வழக்கமாக நடைபெறும் பணியாகும். இந்த டேங்கில் உயிர் காற்று (ஆக்ஸிஜன்) இல்லாத நிலையில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த 2018-ம் ஆண்டில் இதே போன்ற விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தற்போது ...

தூத்துக்குடி மாநகராட்சி சாலைகளில்...கவலைக்கிடமான சாலையில் இதுவும் ஒன்று.! - மாநகராட்சி நிர்வாகம் சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை.!

  தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள முக்கிய பிரதான சாலைகளின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கால்வாய் சேனல் மூடி பல இடங்களில் உடைந்து போக்குவரத்துக்கு தடையாகவும், பொதுமக்களுக்கு மரண பயத்தையும் ஏற்படுத்துகிற மரண குழியாகவும் அமைந்துள்ளது. இதன்படி பக்கிள் ஓடை 4ம் பாலத்தில் அமைந்துள்ள 5 வழிச் சாலையில், மட்டக்கடை நோக்கி செல்லும் பாதையில், குரூஸ்புரம் கால்நடை மருத்துவமனை அருகில் "பாதாள சாக்கடை கால்வாய் சேனல்" உடைந்து மாதங்கள் பல ஆகியும் இன்று வரை பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மரண பயத்தில் இந்த மரணக்குழியை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம்  மக்கள் பிரச்சனையை நேரில் பார்வையிட்டு நிரந்தர தீர்வு காண வழி வகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.