Posts

Featured Post

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.

Image
இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 73. இதனை தொடர்ந்து திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தம் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உறவினர்கள் திரையுலகினர், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூன் 28) பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், இயக்குநர் பாக்யராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கலில் “திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகள் - மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு.!

Image
  தூத்துக்குடி பணிமய மாதா ஆலய திருவிழா அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது அதனை முன்னிட்டு திரேஸ்புரம் முதல் பணிமயமாதா ஆலயம் வரை ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு வருகிறது இந்த பணி விரைவாக நல்லமுறையில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மாதா கோவில் முன்பு நடைபெறுகின்ற பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிகளை பார்வையிட்டார் அப்போது அங்கு இருந்த ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் அடுத்த மாதம் மாதா கோவில் திருவிழா ஆரம்பமாகிறது அதற்குள் விரைவாக பணியை முடிக்க வேண்டும் தரமான முறையில் பணிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் மேலும் பேவர் பிளாக் கல் பதிக்கும் விபரங்களையும் கேட்டறிந்தார் பணிகள் முடிந்த பிறகு மேடு பள்ளம் இருக்கக் கூடாது காலி இடத்தில் இருக்கும் மணல்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் மாதா கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இருக்கக் கூடாது என்று ஒப்பந்ததாரரிடம் கூறினார். மேலும் ஒப்பந்ததாரரிடம் அளவு எடுக்கும் டேப்பை கொண்டு வரச் சொல்லி மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது படி நீளம் அகலம் அமைக்...

தூத்துக்குடி மாவட்ட பொது தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு.!

Image
தூத்துக்குடி மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் 8வது ஆண்டு பேரவைக்கூட்டம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ரவிதாகூர் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட நிர்வாகி கந்தசாமி கொடியேற்றினாா். மாவட்ட நிர்வாகி தஸ்லீஸ் வரவேற்புரையாறினார்.  முனிஸ்வரன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார் பேரவை கூட்டத்தை சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து துவக்கி வைத்தார் மாவட்டச்செயலாளர் பெருமாள் வேலை அறிக்கை முன் வைத்தார். மாவட்ட பொருளாளர் சுப்புலட்சுமி வரவு செலவுஅறிக்கை முன் வைத்தார். பேரவையை நிறைவு செய்து சிஐடியு மாநில துணைத்தலைவர் ரசல் பேசினார். உப்பு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணவாளன் வாழ்த்தி பேசினார். கூட்டத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தை முறையாக செயல்படுத்கோரியும். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை உடல் உழைப்பு தொழிலாளர்கள் பிள்ளைகளுக்கு கல்வி உதவி நிதி உயர்த்தி வழங்குதும், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நல வாரியம் மூலம் இலவச வீடு, வீடு கட்ட நிதி, திருமண நிதி ரூ20000.  விபத்து மரணம் 5லட்சம், இயற்கை மரணம் 2 லட்சம். கட்டுமானம் நலவாரியம் போல் உயர்த்தி வழங்கிடு, தீபாவள...

"கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்" -பிஜேபி நயினாா் நாகேந்திரன் கேள்வி.?

Image
தூத்துக்குடி கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது   கர்நாடகாவை சேர்ந்தவர் வெங்கட நாராயணா. இவர் ஜனநாயகன் படத்தில் தயாரிப்பாளர். இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தமிழகத்தின் முதல்வர் விஜய் வெங்கட் நாராயணன் என்பவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாகி, கர்நாடக முதல்வர் சிவக்குமாரின் நெருங்கிய நண்பர் இவரை தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது எந்த விதத்தில் நியாயம்? இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.  கர்நாடகாவில் ஏற்கனவே மேகதாது பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது, தென்பெண்ணை ஆறு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது இந்த சூழ்நிலையில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இவர் இருந்தால் தமிழகத்திற்கு எப்படி நீதி கிடைக்கும் இது பாஜகவின் குற்றச்சாட்டு. தவெக நிர்வாகிகள் நேற்று மட்டும் ந...

"ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருப்பதே தவெகவின் நிலைப்பாடு கூட்டணிக் கட்சிகள் விரைவில் புரிந்து கொள்வார்கள்" கனிமொழி எம்.பி பேட்டி.!

Image
  தூத்துக்குடி விமானநிலைய வளாகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சட்டப்பேரவை என்பது ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக இருக்க வேண்டும். அதைவிட்டு, தனிநபர்களையோ தலைவர்களையோ இழிவுபடுத்தக்கூடிய இடமாகவோ, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய இடமாகவோ அது மாறிவிடக் கூடாது. அனைவருக்கும் மரியாதை அளிக்கக்கூடிய இடமாக அது இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்பவை எல்லாருடைய வாழ்க்கையிலும் சகஜமான ஒன்னு அதையெல்லாம், ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது என்பது சரியாக இருக்காது என்பதை உணர்ந்த இடமாக அது இருக்க வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்.  அந்த எதிர்பார்ப்பு, அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலிருந்தாவது நிறைவேற வேண்டும். மத்திய அரசுடன் தவெக அரசு இணக்கமாக இருக்கும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "தவெக எப்போதும் ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் எடுத்து வருகிறது. கூட்டணியில் இருக்கக்கூடிய மற்ற கட்சிகளும்...

"தமிழக அரசு தற்காலிக பணியாளருக்கான ஆணை தான் வழங்கியுள்ளது எனக்கு நிரந்தர பணி வேலை வேண்டும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கு வாங்கித் தாருங்கள்" கப்பல் மாலுமி மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை

Image
எனது கணவரின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுத்த உங்களுக்கு நன்றி  தமிழக அரசு தற்காலிக பணியாளருக்கான ஆணை தான் வழங்கியுள்ளது எனக்கு நிரந்தர பணி வேலை வேண்டும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கு வாங்கித் தாருங்கள் கப்பல் மாலுமி மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார். தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்த நிஷாந்த் கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்த போது கப்பலில் வைத்து உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார். இதனையடுத்து நிஷாந்த் மனைவிக்கு ஆறுதல் கூறுவதற்கு கனிமொழி எம்.பி நிஷாந்த் வீட்டிற்கு சென்று நிஷாந்த் மனைவிக்கு ஆறுதல் கூறினார் அப்போது நிஷாந்த் மனைவி எனது கணவரின் உடலை கொண்டு வருவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்த உங்களுக்கு நன்றி என கூறினார். தமிழக அரசு எனக்கு தற்காலிக பணியாளர் பணி தான் வழங்கியுள்ளது நீங்கள் எனக்கு நிரந்தர பணி பெற்றுத் தர வேண்டும் உங்களால் முடியும் என நிஷாந்த் மனைவி கனிமொழி எம்பியிடம் கூறினார் அதுபோல எனது கணவரின் மரணத்திற்கான இன்சூரன்ஸ் தொகை இதுவரை வரவில்லை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அதற்கு கனிமொழி எம்பி கண்டிப்பாக நிரந்தர பணி பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் அது போல...

தூத்துக்குடி பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Image
தூத்துக்குடி புனித அன்னாள் சி.ஐ.எஸ்.சி.இ பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான சுபாஷினி கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டுமென்று மாணவர்களிடம் அன்பாக வலியுறுத்தினார்கள். நீதிஅரசர் சிறப்புரைக்கு பின்பு தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சூசைநாதர் மதுவிலக்கு இயக்கத்தின் முன்னாள் இயக்குநர் ஜெயந்தன் டி கிரேஸ் உரையாற்றுகையில், மாணவர்கள் போதைப் பொருட்களிலிருந்து விலகி, நன்னெறி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக ஊடகப்போதை, மதுப்போதை, மற்றும் வாழ்வை அடிமைப்படுத்தும் பல்வேறு போதைப் பழக்கத்திலிருந்து வெளிவந்து அறநெறியான வாழ்க்கையை நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். நிகழ்ச்சிகளை பள்ளியின் தாளாளர் பிரமிளா பிரான்சிஸ், முதல்வர் விஜய்அன் மற்றும் அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பு செய்திருந்தாா்கள்.