Posts

Featured Post

பதவியேற்பதற்கு முன்னர் MLA பதவியை ராஜினாமா செய்த விஜய்!

Image
  தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பதவியேற்பதற்கு முன்னர் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா  செய்தார். ராஜினாமா செய்ததற்கான கடிதத்தினை, அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், ப. வெங்கடரமணன் ஆகியோர் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசனை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.

தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்த முதலமைச்சர் ஜோசப் விஜய்!- .வீரமணியை சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை.!

Image
  தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி யை சந்தித்து பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கினார்.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம்.!

Image
  தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவை தொடர்பாக தொடர்ச்சியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் எம்.சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. க. மணிவாசன், காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், முதலமைச்சரின் செயலாளர் ஜி.லட்சுமி பிரியா , காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

"எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்" - திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்

Image
இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில்   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.  ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும்  ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.  'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப...

200 யூனிட் மின்சாரம் இலவசம் அறிவிப்பு - ஆனால் அனைவருக்கும் இலவச மின்சாரம் இல்லை!

Image
  தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற கோப்பில் கையெழுத்திட்டார் தமிழ்நாட்டின் புதிய முதல்வர்.   இதுவரை மாநிலம் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

60 ஆண்டுகள் திராவிட ஆட்சிக்கு முடிவுரை எழுதிய விஜய்- தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்பு.!

Image
  சுமார் அறுபது ஆண்டுகளாக இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்த சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜோசப் விஜய் இன்று தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஞாயிற்றுக்கிழமை விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை சுமார் 10 மணியளவில் விஜய் பதவியேற்றார். பின்னர் தவெகவைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார், ஏ. ராஜமோகன், டி.கே. பிரபு, எஸ். கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். விழா மேடையிலேயே முக்கியமான கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை'போதைப்பொருளை தடுக்க சிறப்பு நடவடிக்கை ஆகியவற்றை அமல்பமுத்தும் கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார். விஜய் தலைமையில் தவெக புதிய அரசு அம...